ஆவடி: வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் மற்றும் பாராட்டு விழா ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய குழுத்தலைவர் பா.கிரிஜா தலைமை தாங்கினார். அயப்பாக்கம் ஊராட்சி தலைவரும், வில்லிவாக்கம் ஒன்றிய திமுக செயலாளருமான துரை வீரமணி வரவேற்றார். ஒன்றிய துணை தலைவர் ஞானபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.