லண்டன்: வங்கி மோசடியில் கைதான நிரவ் மோடியை நாடு கடத்தினால், அவர் அங்கு தற்கொலை செய்துகொள்ள வாய்ப்புள்ளதாக, அவரது தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (50), லண்டனுக்கு தப்பி சென்றார். நீதிமன்ற நடவடிக்கை மற்றும் இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், அவர் அங்கு கைது செய்யப்பட்டு தென்மேற்கு வென்ட்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாம் கூசி உத்தரவிட்டார். அதற்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பிரீதி படேல் ஒப்புதல் அளித்தார்.