சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் போக்சோவில் கைது

கும்மிடிப்பூண்டி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சத்தியவேடு கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (62). தமிழக எல்லையில் உள்ள மாநெல்லூர் கிராமத்தில் சில நாட்களாக வசித்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு, தசரதன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அந்த சிறுமி, பெற்றோரிடம் கூறி, அழுதாள். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தசரதனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories: