பெரம்பூர்: பெரம்பூர் நீலம் தோட்டம் தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் (21). இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன், தாய் மற்றும் தந்தை இல்லாமல் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த கீர்த்தனா (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த கீர்த்தனா கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். திருமணமாகி 6 மாதமே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.