மதுரை: பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், ‘‘புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் போலீசார் என் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வரும் 23ம் தேதி ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமயம் நீதிமன்றத்தின் சார்பில், எச்.ராஜாவுக்கு அனுப்பப்பட்ட சம்மன் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் ெசய்யப்பட்டன.