அரக்கோணம்: அரக்கோணத்தில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் கம்பெனி பஸ் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தனியார் கம்பெனி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கம்பெனி பஸ் இன்று அதிகாலை அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் நோக்கி சென்றது. அரக்கோணம் விண்டர்பேட்டை ரயில்வே உயர் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென நிலை தடுமாறிய பஸ், சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.