திருவனந்தபுரம்: கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசு ரூ.12 கோடி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் அரசு லாட்டரி விற்பனை செய்கிறது. வருடந்தோறும் ஓணம், கிறிஸ்துமஸ், சித்திரை விஷூ உள்பட பண்டிகைகளையொட்டி பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்படும். கடந்த இரு மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து லாட்டரி விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.