திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா காரணமாக பக்தர்கள் முன்பதிவு செய்த பின்னரே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று வௌியிடப்பட்டது. காலை 9 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/index.html என்ற இணையத்தில் சென்று பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.