லண்டன்: இங்கிலாந்தில் கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது அங்கு கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுப்படுத்தப்படவில்லை. கடந்த வெள்ளி மற்றும் சனியன்று 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் புதிய தொற்று பாதிப்பு 48,161 ஆக குறைந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அரசு ஏற்கனவே அறிவித்தபடி, அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நேற்று முதல் தளர்த்தப்பட்டன.