ரியாத்: புனித ஹஜ் பயணம் நேற்று தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான இஸ்லாமியர்கள் மெக்காவில் குவிந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து ஹாஜிகள் யாருக்கும் சவுதி அரசு அனுமதி வழங்கவில்லை. சவுதி அரேபியாவில் வசிக்கும் பல்வேறு நாட்டினர் 60,000 பேருக்கு மட்டும் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்றவர்கள் மெக்காவை அடைந்து நேற்று முதல் ஹஜ் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இதுகுறித்து அங்குள்ள இஸ்லாமியர் ஒருவர் தெரிவித்ததாவது, கொரோனா பரவலை அடுத்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.