அண்ணாநகர்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜகன் (44, பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது குடும்பத்துடன், கடந்த ஞாயிறன்று சென்னை அண்ணாநகரில் வசிக்கும் தனது அக்காவின் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று மாலை ஜகனின் 10 வயது மகள் மற்றும் 12 வயது மகன் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களது வீட்டின் அருகே ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி, 10 வயது சிறுமியை தனியே அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதை பார்த்ததும் ஜகனின் மகன் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனால் அந்த வாட்ச்மேன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தனது பெற்றோரிடம் நடந்தவற்றை சிறுமி அழுதபடி கூறியிருக்கிறாள்.