செம்ஸ்போர்ட்: டி20 தொடரின் 3வது ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரை வென்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட், தலா 3 ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியது. மிதாலி ராஜ் தலைமையில் விளையாடிய டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் டி20 தொடரில் இந்திய மகளிர் அணி ஆடியது. முதல் ஆட்டத்தை 18ரன் வித்தியாசத்தில் இங்கிலாநதும், 2வது ஆட்டத்தை 8 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும் வென்றது. இந்நிலையில் தொடர் வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசி டி20 ஆட்டம் நேற்று நடந்தது. டாஸ் வென்று களமிறங்கிய இந்தியா, 20ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153ரன் எடுத்தது. ஸ்மிரிதி மந்தானா70(51பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்மன் 36(26பந்து, 5பவுண்டரி, 1 சிக்சர்), ரிச்சா கோஷ் 20(13பந்து , 4 பவுண்டரி) ஆகியோர் நன்றாக விளையாடினர்.