பெர்லின்: ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 20 பேர் பலியாகினர். ஜெர்மனியில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு மற்றும் மத்திய ஜெர்மனியின் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அக்ர்வெய்லர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர். ஊருக்குள் வெள்ளம் திடீரென பாய்ந்ததால், வீடுகள் இடிந்தன. கார்கள் அடித்துச் செல்லப்பட்டு, சேதமடைந்தன. 50க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.