சிவகங்கை அருகே நெகிழ்ச்சியான சம்பவம் வளர்ப்பு நாயை கண்டுபிடித்து தந்தால் 5 ஆயிரம் சன்மானம்: போஸ்டர் அடித்து ஒட்டிய விவசாயி

சிவகங்கை: சிவகங்கை அருகே வளர்ப்பு நாயை கண்டுபிடித்து தந்தால் 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படுமென விவசாயி ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் வயிரவன். ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் ஆர்வமிக்கவர். இவரது வளர்க்கும் வெள்ளையன் காளை, ஏராளமான ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வமுடையவர்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இருந்து ஒரு நாய்க்குட்டி வாங்கி வந்துள்ளார். ராஜபாளையத்தை சேர்ந்த இனம் என கூறப்படுகிறது. இந்த நாய்க்குட்டி 3 தினங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனால் வயிரவன் கவலை அடைந்தார். தனது வளர்ப்பு நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என மதகுபட்டி, பாகனேரி, சொக்கநாதபுரம் பகுதி சாலைகளில் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். இந்த போஸ்டர் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போஸ்டர் அடித்ததோடு நில்லாமல், குடும்பத்தினர், உறவினர்கள் மூலம் தீவிரமாக தேடி வருகிறார்.

Related Stories: