நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாஜகவின் அண்ணாமலையை பார்த்து இளைஞர் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நாளை பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சென்ற அவர் அக்கட்சியினர் இடையே உரையாற்றினார். அங்கு வந்த இளைஞர் ஒருவர் அண்ணாமலையை பார்த்து நான் தமிழனே இல்லை கன்னடர் என நீங்கள் பேசும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வருகிறதே என்று கேட்டிருக்கிறார். அவ்வாறு பேசிவிட்டு இப்போது இங்கு ஏன் வந்தீர்கள் என கேள்வி கணைகளை தொடுத்திருக்கிறார்.