பெர்லின்: ஜெர்மனியில் பெய்த கனமழையால் அந்நாட்டின் மத்திய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல் மையம் கொண்டதால் ஒரே இரவில் பெய்த கனமழையால் ஜெர்மனியில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள ஹாஹன் நகரில் கார்கள் நீரில் மூழ்கின. குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளிலும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.