வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் நிர்வாகிகள் குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சங்க தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் கே.எஸ்.சேகர் முன்னிலை வகித்தார். கவுரவ தலைவர் வினாயகம் உட்பட அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  இதில் கொரோனாவால் உயிரிழந்த வியாபாரிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, வணிகர்களுக்கு அங்கீகார அடையாள அட்டை வழங்குதல், முதலாம் ஆண்டு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுதல், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெற உள்ள கூட்டம்  குறித்து ஆலோசனை நடந்தது.  மேலும், உத்திரமேரூர் பஜார் வீதி முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்த  சங்க நிர்வாகிகள் ₹1 லட்சம் அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

Related Stories: