திருவாரூர் : திருவாரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகளில் சாலையோர மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் திருவாரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று திருவாரூர் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றது. இதனையொட்டி பழையவலம், ஒடாச்சேரி, ஆமூர், வைப்பூர் மற்றும் சோழங்கநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த மரக்கன்றுகள் நடும் திட்டத்தை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார்.