திருவாரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் திட்டம்-எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார்

திருவாரூர் : திருவாரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகளில் சாலையோர மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் திருவாரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று திருவாரூர் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றது. இதனையொட்டி பழையவலம், ஒடாச்சேரி, ஆமூர், வைப்பூர் மற்றும் சோழங்கநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த மரக்கன்றுகள் நடும் திட்டத்தை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார்.

மேலும் வைப்பூர் பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை ஆய்வு செய்த எம்எல்ஏ பூண்டி கலைவாணன் அங்குள்ள ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் அங்கு நடைபெற்று வரும் தொகுப்பு வீடுகள் கட்டும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் புலிவலம் தேவா, துணைத் தலைவர் தியாகராஜன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் புவனேஸ்வரி மற்றும் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: