தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய முயன்ற பழங்குடியின மக்களை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா மாநிலத்தின் மடகுடெமில் என்ற கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மலையை ஒட்டியிருக்கும் நிலத்தில் பயிரிட உழவு செய்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது என்று கூறி உழவு பணியை தடுக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.