மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து 4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகம் கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (60). பைனான்ஸ் தொழில் பார்த்து வரும் இவர், அந்த பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட 4 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச வீடியோ படங்களை காண்பித்து அதுபோல் தன்னிடம் பாலியல் சில்மிசம் செய்ய வேண்டும் என்றும், ஆடைகளைக் களைந்து காட்டுவதும், தன்னிடம் இதுபோல் நடக்கவில்லை என்றால் பள்ளிக்கு செல்லும்போது கட்டிப்போட்டு ஆடைகளை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்வேன் என்றும் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.