புதுடெல்லி: யானை வழித்தடம் ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்ட விவகாரத்தில் ரிசார்ட் மற்றும் நில உரிமையாளர்கள் தங்களுக்கான இழப்பீட்டை அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் தான் கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து, நீலகிரி ரிசார்ட் உரிமையாளர்கள் உட்பட பலர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவையே மீண்டும் உறுதி செய்தது. மேலும், யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்களை அகற்றும் பொழுது சட்டப்பூர்வமாக கட்டங்களை வரைமுறை படுத்தவும், நிவாரணம் தொடர்பாக ஆராயவும் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் தனி குழு அமைத்துள்ளது.