துபாய். சென்னையில் 15 வயது சிறுமியை வாலிபர்கள் முதல் வயதான தாத்தாக்கள் வரை பலர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்ற சம்பவம், இலங்கயைிலும் நடந்துள்ளது. ஆனால், இது சற்று வித்தியாசமான சம்பவம். கடந்த மாதம் 7ம் தேதி 15 வயது சிறுமியை இணையதளம் மூலம் விற்பனை செய்ததாக இலங்கையில் உள்ள கொழும்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் 15 வயது சிறுமியை பெரிய கும்பலே பாலியல் பலாத்காரம் செய்து இருப்பதும், இதில் மாலத்தீவு முன்னாள் நிதி அமைச்சர் முகமது அஷ்மலி உள்பட 32 பேர் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர்கள் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.