நெல்லையில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

நெல்லை: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சோழாபுரம், குன்னக்குடி பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 5ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்  இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் இறந்தார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில், ஏற்கனவே  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கயத்தாறு பகுதியைச் சேர்ந்த இருவர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: