டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பு குழுவின் கொரோனா பாதுகாப்பு கெடுபிடிகளால் நிருபர்களும் வியப்பு அடைந்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்னும் 16 நாட்களில் தொடங்க உள்ளது. இதையொட்டி வெளிநாடுகளில் இருந்து வரும் அணைவருக்கும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. 14 நாள் தனிமைப்படுத்தலை கருத்தில் கொண்டு முன்னதாகவே டோக்கியோ சென்ற சிங்கப்பூரை சேர்ந்த ராய்ட்டர் செய்தி நிறுவன நிருபர் ஒருவர், ஒலிம்பிக் அமைப்பு குழுவின் பாதுகாப்பு கெடுபிடிகளை கண்டு மிரண்டுபோனார். நாரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவரை வி.வி.ஐ.பி போல 3 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் முகாமுக்கு காரில் அழைத்து சென்றனர்.