வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியுரிமை பெறாத பெற்றோரின் 2 லட்சம் வாலிபர்களை பாதுாக்கும் வகையில் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் எச்1பி, எல்1, இ1 மற்றும் இ2 போன்ற பணி விசா மூலம் பலர் தங்கி வேலை பார்க்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நீண்ட காலமாக கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமைக்காக காத்திருக்கின்றனர். இவ்வாறு குடியுரிமை பெறாதவர்களின் குழந்தைகள் 21 வயது ஆனதும், அமெரிக்காவில் இருந்து தாமாக நாடு கடத்தப்படுவார்கள் என்ற குடியுரிமை சட்டம் அமலில் உள்ளது. அந்த வகையில் ஏராளமான இந்திய வாலிபர்கள் உட்பட 2 லட்சம் பேர் இதுபோன்ற நாடு கடத்தல் நடவடிக்கைக்கு ஆளாக உள்ளனர்.