போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியிலிருந்து தர்மபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 65 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள புலியூர் ஜம்பு ஏரிக்கு, பாரூர் பெரியஏரியின் உபரிநீர் வருகிறது. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படும்போது ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். இந்தாண்டும் ஏராளமான பறவைகள் புலியூர்ஜம்பு ஏரிக்கு வந்த வண்ணம் உள்ளது. வெள்ளை அரிவாள் மூக்கன், வெள்ளை கொக்கு, நீர்க்காகம், பிளம்மிங்கோ உள்ளிட்ட பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன.