சென்னை: மக்கள் நலன்காக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர் தினத்தையொட்டி வாழ்த்துக்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பக்கத்தில், உயிர் காக்கும் உன்னத சேவையே வாழ்நாள் கடமையென செயல்படும் மருத்துவர்கள் பணி மகத்தானது. கடினமான பேரிடர் காலங்களிலும் தன்னலம் கருதாமல் மக்கள் நலன்காக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த தேசிய மருத்துவர் தினத்தில் எனது வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.