சென்னை: பிரான்ஸ், நெதர்லாந்து நாடுகளிலிருந்து பிறந்தநாள் பரிசு என்ற பெயரில் சரக்கு விமானதில் வந்த ரூ.5.25 லட்சம் மதிப்புடைய 105 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பழைய விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்த சரக்கு விமானத்தில் வந்த கொரியர் பார்சல்களை விமான நிலைய சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் நெதர்லாந்து நாட்டிலிருந்து ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஹரி என்பவரின் முகவரிக்கு பிறந்தநாள் பரிசு பொருட்கள் இருப்பதாக ஒரு பார்சல் வந்திருந்தது. அதே விமானத்தில் பிரான்ஸ் நாட்டிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒருவருக்கு பிறந்தநாள் பரிசு என்று மற்றொரு பார்சல் வந்திருந்தது.