சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்காக தொழில் அதிபர்கள், பெரும் நிறுவனங்கள், திரையுலகினர், வெளிநாடுவாழ் தமிழர்கள் உள்ளிட்ட பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமாகாவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏவும், மூத்த தலைவருமான கோவை தங்கம் தலைமையில் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.25லட்சம் வழங்கப்பட்டது. நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினர்.