திருப்பதியில் மனைவியை கொலை செய்து எரித்த கணவரின் வெறிச்செயல்...! போலீசார் விசாரணையில் தகவல்

திருப்பதி: திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு பெண் உடல்  கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் கைப்பற்றப்பட்ட தலைமுடியைக் கொண்டு அதனை பெண் தான் என போலீசார் உறுதிப்படுத்தினர். அந்தப் பகுதியில் மாயமான பெண்களின் விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் திருப்பதி புங்கனூர் மண்டலத்தில் உள்ள ராமசாமுத்திரம் பகுதியை சேர்ந்த அலிபிரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த டெக்கி புவனேஸ்வரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாயமானது போலீசாருக்கு தெரியவந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது புவனேஸ்வரியை அவரது கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி வீட்டில் கொலை செய்து உடலை  மருத்துவமனையின் வளாகத்தில் எரித்தது தெரியவந்துள்ளது. புவனேஸ்வரியை வீட்டில் வைத்து கொலை செய்து உடலை சூட்கேசில் எடுத்து வந்து அங்கு தீவைத்து எரித்தது தெரியவந்திருப்பதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

உறவினர்களிடம் ஸ்ரீகாந்த் ரெட்டி தனது மனைவி கொரோனா டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் அங்கு அவர் இறந்து விட்டதாகவும் பொய் தகவலை தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததால் உடலை கொடுக்கவில்லை என ஸ்ரீகாந்த்  நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: