தெலங்கானாவில் பிளஸ் 2 மாணவர்கள் ஆல்-பாஸ்

திருமலை: தெலங்கானாவில் 12ம் வகுப்பு தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.  தெலங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இண்டர்மீடியட் 2ம் ஆண்டு (12ம் வகுப்பு) தேர்வுகளை அம்மாநில அரசு ரத்து செய்தது. இண்டர்மிடியட் 2ம் ஆண்டு தேர்வு முடிவுகளை கல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி நேற்று வெளியிட்டார். அவர் கூறுகையில்,` இந்த ஆண்டு தேர்வுக் கட்டணம் செலுத்திய இண்டர்மீடியட் 2ம் ஆண்டு மாணவர்கள் 4,51,585 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 2,28,754 மாணவிகள், 2,22,831 மாணவர்கள் ’ என்றார்.

Related Stories: