துபாய்: இந்தியாவில் நடத்த திட்டமிட்டிருந்த டி20 உலக கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் நடந்த ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா காரணமாக ஆஸ்திரேலியாவில் 2020ல் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டது. அதற்கு பதில் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்த டி20 உலக கோப்பையை நடத்த ஐசிசி முடிவு செய்தது. கொரோனா அச்சுறுத்தல் தொடர்வதால் ஐபிஎல் டி20 தொடரும் இடை நிறுத்தப்பட்டு, எஞ்சியுள்ள ஆட்டங்களை செப்டம்பர், அக்டோபரில் அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.