தமிழகம் மதுரையில் 7 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்!: அமைச்சர் ஏ.வ.வேலு உறுதி..!! Jun 26, 2021 கலைஞர் நினைவு நூலகம் மதுரோ அமைச்சர் வ. வேலு மதுரை: மதுரையில் 7 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு உறுதிபட தெரிவித்துள்ளார். மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படவுள்ளது. இந்த கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 6 இடங்களை அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 6 இடங்களை ஆய்வு செய்தோம். இந்த நூலகம் அமையவுள்ள இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் அறிவிப்பார் என்று கூறினார். மதுரையில் 7 தளங்களோடு கூடிய கலைஞர் நூலகம் 24 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பொதுமக்கள் தனித்தனியே நூல்கள் படிப்பதற்கு ஏற்றவகையில் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். மேலும் மதுரையில் நூலகம் அமைவது மிகவும் சாலச்சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்: வரும் 15ம் தேதி வரை நீட்டித்து டிஆர்பி அறிவிப்பு
செய்தித்தாள்கள் வாசிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் கல்வி வளர வேண்டும் என்பதே இந்த கண்காட்சியின் நோக்கம்: அமைச்சர் பொன்முடி பேச்சு
கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதி கோரி வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரும் கட்டமைப்பு கல்லூரிகளை ஆராய்ந்து பார்த்து மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்: விஐடி இணை துணைவேந்தர் தியாகராஜன் அறிவுரை
தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சி அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்த கல்வியாளர்கள்; பெற்றோர் மகிழ்ச்சி
தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகிக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குரல் குளோனிங்கை பயன்படுத்தி ஆள்மாறாட்ட மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் அறிவுரை
வெள்ளுடை வேந்தர் தியாகராயர் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பதவி வரும் 3ம் தேதி இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்