இந்தியா தேசத்துரோக வழக்கில் பிரபல நடிகை ஆயிஷாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்!: விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் ஆணை..!! Jun 25, 2021 கேரள உயர் நீதிமன்றம் ஆயேஷா திருவனந்தபுரம்: தேசத்துரோக வழக்கில் பிரபல நடிகை ஆயிஷா சுல்தானுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. லட்சத்தீவு நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட்டேல் அண்மையில் கொண்டு வந்த சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஆயிஷா சுல்தானா, லட்சத்தீவில் கொரோனாவை பரப்பும் உயிரி ஆயுதமாக பிரபுல் கோடா பட்டேலை ஒன்றிய அரசு பயன்படுத்துவதாக விமர்சித்தார். இதுகுறித்து பாஜக பிரமுகர் அளித்த புகாரில் லட்சத்தீவு போலீசார் நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த 17ம் தேதி நடிகை ஆயிஷாவுக்கு ஒருவார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம், அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டது. இதையடுத்து லட்சத்தீவில் உள்ள கவரத்தி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் நடிகை ஆயிஷாவிடம் 2வது முறையாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஆயிஷா சுல்தானா தரப்பு விளக்கத்தை ஏற்று நீதிபதி அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். போலீஸ் விசாரணைக்கு ஆயிஷா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருவதா?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம்
விதிகளுக்கு மாறாக நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு!: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்..!!
10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய பேச்சு மேடையில் ஒலிபரப்பு.. இத்தனை பொய்களை பேசலாமா?: மோடிக்கு தேஜஸ்வி யாதவ் கேள்வி..!!
தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி ஐகோர்ட்
ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.. துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி மோதல்
வாக்குப்பதிவு இயந்திரங்கள்,வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் சின்னங்களை சேமிப்பது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: தேர்தல் ஆணையம் வெளியீடு
திருவனந்தபுரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; 6 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை: இரும்பு சங்கிலியால் கட்டிப்போட சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவு