இந்தியா கேரளாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு வழிபாட்டு தலங்கள் திறப்பு: ஆடி மாத பூஜைக்கு சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி Jun 25, 2021 கேரளா சபரிமலை ஆடி மாதம் கேரளா: கேரளாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. ஆடி மாத பூஜைக்கு சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதாவது அதிகாலை 3.15 முதல் 4.15 மணி வரையும், 5.15 முதல் 6.15 மணி வரையும், காலை 8.30 முதல் 10 மணி வரையும், 10.30 முதல் 11.15 மணி வரையிலும், மாலை 5 முதல் 6.15 மணி வரையும், 6.50 முதல் 7.20 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். குருவாயூர் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோவில்களும் நேற்று முதல் திறக்கப்பட்டன. ஆனால் கருவறையில் இருந்து பக்தர்களுக்கு நேரடியாக பிரசாதங்கள் வழங்கப்பட வில்லை. கொரோனா தொற்று பரவல் விகிதம் 16 சதவீதத்திற்கும் கூடுதல் உள்ள இடங்களில் கோவில்கள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிக்கலாமா? என்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆலோசனை நடத்தியது. ஆடி மாத பூஜையையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது.
நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கு.. தெலுங்கானா போலீஸ் முடித்து வைத்துள்ள நிலையில் மீண்டும் விசாரிக்க முடிவு..!!
கடந்த 15 நாட்களில் பஞ்சாப் மாநில எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல்: எல்லைப் பாதுகாப்பு தகவல்
அரசியல் தலைவர்களின் பெயர் வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி
கட்டுப்பாடுகளால் வாகன விலை 2 மடங்கு உயர்வு 28 சதவீத ஜிஎஸ்டியை நாங்கள் ஏன் தர வேண்டும்? ராஜீவ் பஜாஜ் காட்டம்
புதிய மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது பற்றி பரிசீலனை: உச்ச நீதிமன்றம் தகவல்; 7ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு