பெங்களூரு: பெங்களூரு செலுவாதிபாளையாவில் முன்னாள் பாஜ பெண் கவுன்சிலரை பட்டப்பகலில் 3 பேர் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் கதிரேசன். இவர் பெங்களூருவில் குடிபெயர்ந்து வசித்து வந்தார். இவர் பாஜவில் இணைந்து கவுன்சிலராகவும் பொறுப்பு வகித்தார். இந்நிலையில், 2018ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி இவரை மர்மகும்பல் கொலை செய்தது. இவரது மனைவி ரேகா (45). இவர் பெங்களூரு காட்டன்பேட்டை சரகத்துக்குட்பட்ட பிளவர் கார்டன் பகுதியில் வசித்து வந்தார். இவரும் 2 முறை பாஜ சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவரது பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார்.