சென்னை 'வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்'!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி..!! Jun 23, 2021 வன்னியர் முதல் அமைச்சர் கே. ஸ்டாலின் சென்னை: வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பென்னாகரம் தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜி.கே.மணி பேசினார். அப்போது வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொரோனா தொற்றை குறைக்க இரவு, பகல் பாராமல் கவனம் செலுத்தி வந்ததை குறிப்பிட்டுள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையும், ஆய்வும் நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் தனக்கு எழுதியுள்ள கடிதத்தில், வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள் மற்றும் தாம்பரம் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை : குடிநீர் வாரியம் தகவல்
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மனநலம், நரம்பியல் துறைக்கு உலக தரத்தில் புதிய கட்டிடம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை
பெங்களூருவில் இருந்து சென்னை வந்தவரிடம் ₹19.50 லட்சம், 114 கிராம் தங்கம் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை
பராமரிப்பு பணி காரணமாக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்
நெரிசல் மிகுந்த ராயப்பேட்ைட பகுதியில் செப்டம்பரில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும்: அதிகாரிகள் தகவல்
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் புகைப்படம் தயாரிப்பு 14 வயது சிறுமியின் உருவம் வரைந்து வலைத்தளங்களில் தேடும் பணி தீவிரம்: 2011ம் ஆண்டு ஒன்றரை வயதில் குழந்தை மாயமான புகார் நீதிமன்ற உத்தரவுப்படி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
சென்னையில் நான்காவது சம்பவம் சிறுமியை ஓடஓட விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள்: சிசிடிவி காட்சிகளால் மீண்டும் பரபரப்பு
பணம் திருடியவர்களை பிடிக்க முயன்றதால் நடைபாதையில் தூங்கிய வாலிபர் மீது ஆசிட் வீச்சு: தப்பிய 4 பேருக்கு வலை
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ₹20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் சூரியஒளி மின்சார உற்பத்தி: மாநகராட்சி அசத்தல்
அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு
பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை