கலசபாக்கம் : கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க முதல் கட்டமாக ₹10 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கிணறு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏ பெ.சு.தி சரவணனிடம் இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து குடிநீர் பிரச்னையை சமாளிக்க முதல் கட்டமாக கடலாடி ஊராட்சி மதுரா புதுப்பேட்டை பகுதியில் பொது நிதியிலிருந்து திறந்தவெளிக் கிணறு அமைக்குமாறு ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரனிடம் எம்எல்ஏ அறிவுறுத்தினார். அதன்பேரில் ₹10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திறந்தவெளிக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.