நேபாளத்தில் மழை, வெள்ளம் 16 பேர் பலி : 22 பேர் மாயம்

காத்மாண்டு: நேபாளத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல் சவுக் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த  பலர் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில்  16 பேரின் சடலங்கள் கிடைத்துள்ளன. காணாமல் போன மேலும் 22 பேரை ராணுவம் தேடி வருகிறது. முன்னதாக, மற்றொரு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 2 இந்தியர்கள், 3 சீனர்கள் உட்பட பல வெளிநாட்டினர் மூழ்கி இறந்தனர்.

Related Stories: