மதுரை: மதுரை திருப்பாலை யாதவர் பெண்கள் கல்லூரியில், கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் செயல்படுகிறது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த 101 வயது மூதாட்டி ராமு அம்மாள் சிகிச்சைக்கு சேர்ந்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன், மருத்துவர்கள் சுரேஷ், மனோரஞ்சிதம், ஷர்மிளா ஜிம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து 14 நாட்களாக சிகிச்சை அளித்துள்ளனர்.