நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இன்று பதவியேற்றுக் கொண்ட ஸ்ரேயா பி சிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கவச உடை அணிந்து கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை மற்றும் உணவு முறையாக வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.