இஸ்லாமாபாத்: இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தொழில்ரீதியாக ஈரான் சென்றபோது பாகிஸ்தான் உளவு படையால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில், அவருக்கு கடந்த 2017ல் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது என பாகிஸ்தானுக்கு தடை விதித்தது. மேலும், தண்டனையை மறுபரிசீலனை செய்யும்படியும், அவருக்கு தூதரக உதவிகளை வழங்கும்படியும் உத்தரவிட்டது.மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக, குல்பூஷனுக்கு வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்க கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது, கடந்த மாதம் 7ம் தேதி விசாரணைக்கு வந்தது.