புதுடெல்லி: டிஏபி உரத்திற்கான மானியத்தை மூட்டைக்கு 700 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் யூரியாவுக்கு அடுத்தப்படியாக, டி-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரம் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த உரம் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை 1700க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில், 500 மானியமாக வழங்கப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கு ஒரு மூட்டை 1,200 என, உற்பத்தி நிறுவனங்கள் இதை விற்பனை செய்து வந்தது. கடந்த மாதம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் டிஏபி உரத்திற்கான மானியத்தை 140 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது.