தமிழகம் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வந்தடைந்தது!: அமைச்சர் நாசர் மலர்தூவி வரவேற்பு..!! Jun 16, 2021 ஆந்திர மாநிலம் கண்டலிப்பேட்டை அணை கிருஷ்ணா நதி நீர் T.N. அமைச்சர் நாசர் மலர்தூவி திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வந்தடைந்தது. சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலமாக ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீரை ஆண்டுதோறும் ஆந்திர அரசு 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு இரண்டு தவணையாக வழங்கி வருகிறது. அதன்படி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் இருமுறை கடிதம் எழுதிய நிலையில் கண்டலேறு அணையில் இருந்து கடந்த வாரம் 14ம் தேதி வினாடிக்கு 500 கனஅடி நீரை ஆந்திர அரசு திறந்து வைத்தது. அந்த தண்ணீரானது தமிழக எல்லையான ஊத்துக்கூட்டை ஸிரோ பாய்ண்ட்டிற்கு வந்தடைந்தது. அதனை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர். ஊத்துக்கூட்டை ஸிரோ பாய்ண்ட்டில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூண்டி சத்யமூர்த்தி நீர்த்தேக்க அணைக்கு கால்வாய் வழியாக இன்று வந்தடைகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பூண்டி அணையில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு திறந்துவிடப்படுகிறது.
ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி; ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம்
வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு
பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே வாக்காளர் பட்டியலை பார்ப்பாங்க…அண்ணாமலையை கலாய்த்த அதிமுக மாஜி அமைச்சர்
போலீஸ்காரரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை 2 பேருக்கு 7 ஆண்டு சிறை: மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது இன்று முதல் 30ம் தேதி வரை 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்: கன்னியாகுமரி, நெல்லையில் லேசான மழைக்கு வாய்ப்பு
அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்களிடம் 10 மணிநேரம் விசாரணை: அமலாக்கத்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி, பதில்கள் வாக்குமூலமாக பதிவு
மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற மதங்களுக்கு எதிராக எந்த சம்பவங்களும் நடக்கவில்லை: பாஜ மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பேட்டி
மதரீதியான பிளவை ஏற்படுத்த மோடி முயற்சி பிரிவினைவாத பேச்சு அடிப்படையில் பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்