பெரம்பூர்: நுண்ணறிவு பிரிவு காவலரை தாக்கி, செயின் பறித்த அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாதவரம் பால்பண்ணை ஆவின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (37), சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக நுண்ணறிவு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு முத்தமிழ் நகரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து இரவு 8 மணி அளவில் பணிக்கு சென்றுள்ளார். அப்போது, முத்தமிழ் நகர் 2வது பிரதான சாலை அருகே போதையில் நின்று கொண்டிருந்த நபர், வெங்கடேஷின் பைக்கை காலால் எட்டி உதைத்துள்ளார். சுதாரித்துக்கொண்ட அவர், பைக்கை நிறுத்திவிட்டு, அவரை கண்டித்துள்ளார்.