பிரேசிலியா: தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க லீக் ஆட்டங்களில் பிரேசில், கொலம்பியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் ‘கோபா கோப்பை’ கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில், பி பிரிவுஅணிகளான நடப்பு சாம்பியன் பிரேசில் - வெனிசுலா மோதின. நட்சத்திர ஆட்டக்காரர் ஜூனியர் நெய்மர் தலைமையிலான பிரேசில் அணி துடிப்புடன் விளையாடி எதிரணி கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தது. அதனால் வெனிசுலா வீரர்கள் நெய்மரை சமாளிக்கவே நேரத்தை செலவிட்டனர்.
பிரேசில் வீரர் மர்ச்விநொஸ் 23வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். 64வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நெய்மர் அழகான கோலாக மாற்றினார். ஆட்டம் முடிய இருந்த 89வது நிமிடத்தில் பிரேசிலின் கேப்ரியல் பார்போசா தன் பங்குக்கு ஒரு கோல் அடித்தார். இறுதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று கணக்கை தொடங்கியது.