சென்னை ரேஷன் கடைகளில் நாளை முதல் ரூ.2,000, 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வினியோகம்!: அமைச்சர் சக்ரபாணி தகவல்..!! Jun 14, 2021 அமைச்சர் சக்ரஷா சென்னை: கொரோனா நிவாரண நிதியான 2வது தவணை 2,000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் நாளை முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன், கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண தொகையாக 4,000 ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2,000 ரூபாய் மே 10ம் தேதி முதல் வழங்கப்பட்டது. 2ம் தவணையாக 2,000 ரூபாய் நாளை முதல் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் பருப்பு, புளி உள்ளிட்ட 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு கடைகளிலும் நாள் ஒன்றுக்கு 75 முதல் 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார். இம்மாதம் இறுதிவரை இப்பொருட்களும், 2வது தவணை நிதியும் வழங்கப்படும் என்பதால் மக்கள் அவசரமின்றி பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் கூறியிருக்கிறார். 14 வகை மளிகை பொருட்கள் வழங்குதலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இப்பொருட்களை சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்தேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்: 2 மகன்களுடன் வீட்டைவிட்டு துரத்திவிட்டதாக குற்றச்சாட்டு
சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு; பிற மாநிலங்களில் இருந்து தகவல் கிடைத்ததும் முடிவு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
6 சட்டமன்ற தொகுதியிலும் எம்பி அலுவலகம் சோழிங்கநல்லூரில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்: தென் சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி
வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்ட பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும்: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி
வலது தொண்டை குருதிக்குழாயில் இளம்பெண்ணுக்கு புற்றுக்கட்டி வெற்றிகரமாக அகற்றம்: அப்போலோ மருத்துவமனை சாதனை
ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் மனோவுக்கு பிரசாரம்: மேட்டுப்பாளையம் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என வாக்குறுதி
நினைத்தது நடக்கவில்லை என்பதால் பழித்து பேசுகிறார் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அண்ணாமலை பொறுப்பில் இருப்பாரா என பார்ப்போம்: எடப்பாடி சொல்கிறார்
தேர்தல் பத்திரம் மூலம் பல கோடிகளை சுருட்டிவிட்டு ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜவிற்கு தகுதி கிடையது: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி
அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தினால் காலை 11 மணிக்கு முன்னர் தடுப்பூசி செலுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளரை ஆதரித்து தாம்பரம் மார்க்கெட் பகுதிகளில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பிரசாரம்
என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால் அறிவிக்கும் திட்டங்களை எல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றி தருவேன்: தென் சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம்