சாயல்குடி : சாயல்குடி கடற்கரை பகுதியில் கடல் அலையால் பனைமரங்கள் வேரோடு சாய்ந்து விழுவதால் புதிய மரங்கள் நடவும், தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மன்னார்வளைகுடா கடற்பகுதியான ரோச்மா நகர், நரிப்பையூர், முக்கையூர், கீழமுந்தல், மாரியூர், வாலிநோக்கம் வரையிலான 15க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி கடற்கரை மிக ஆழமானது என்பதால், எந்நேரமும் கடல் அலையின் சீற்றம் சற்று அதிகமாக இருக்கும். கரையோரங்களில் மண் அரிமானத்தை தடுப்பதற்காக மன்னார் வளைகுடா உயிர்கோளம் பாதுகாப்பு மற்றும் வனத்துறை சார்பாக நடபட்ட பனைமரம், சவுக்கு மரங்கள் தொடர் வறட்சியால் பட்டுபோய் நின்றது. அதிகாலை, இரவு நேரங்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட பருவநிலை மாறும் காலங்கள், புயல், மலை, சூறைக்காற்று போன்ற இயற்கை சீற்றக் காலங்களில் கூடுதலாக அலை சீற்றம் இருக்கும்.