புதுடெல்லி: பிரதமர் மோடி தனது தாடியை மழிப்பதற்காக மகாராஷ்டிராவை சேர்ந்த டீ வியாபாரி ரூ.100 மணியார்டர் செய்துள்ளார். மகாராஷ்டிராவின் பாராமதியை சேர்ந்தவர் அனில் மோர். சிறிய டீ கடை நடத்தி வருகிறார். சிறு வியாபாரியான இவர், பிரதமர் மோடிக்கு ரூ.100 மணியார்டர் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அதில், ‘உங்கள் தாடியை ஷேவ் செய்யுங்கள்,’ என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அனில் மோர் கூறுகையில், “பிரதமர் மோடி தாடி வளர்த்துக் கொண்டுள்ளார். அவர் எதையாவது அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினால், இந்த நாட்டு மக்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். எல்லா மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.