சேலம்: சேலத்திற்கு 12ம் தேதி வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தண்ணீர் மூலம், 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி வரும் 12ம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘‘வரும் 12ம் தேதி காலை, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார்.